LabLynx Wiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு 1528 (MDXXVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- சனவரி 12 - சுவீடனின் மன்னராக முதலாம் குஸ்தாவ் முடி சூடினார்.
- அக்டோபர் 3 - ஆல்வரோ டெ சாவெத்ரா செரோன் மலுக்கு தீவுகளை அடைந்தார்.
- நவம்பர் 6 - எசுப்பானியர் ஆல்வர் நூனெசு கபேசா டெ வாக்காவும் குழுவினரும் டெக்சசில் காலூன்றினர். இங்கு வந்த முதலாவது ஐரோப்பியர் இவர்களாவர்.
- மொண்டெனேகுரோ துருக்கியின் கீழ் சுயாட்சி பெற்றது.
- மாயர்கள் யுகடானில் இருந்து எசுப்பானியரை விரட்டினர்.
- எசுப்பானியா அகபல்கோவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- அரையாப்பு கொள்ளைநோய் இங்கிலாந்தில் பரவியது.[1]
- வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் இங்கிலாந்தில் மீண்டும் பரவியது. இம்முறை இது வட ஐரோப்பாவிலும் பரவியது.
- சீனாவின் ஹெய்நான் மாகாணத்தில், மிங் அரசமரபு காலத்தில், பெரும் வறட்சி நிலவியது. பட்டினி, மற்றும் தன்னின உயிருண்ணி ஏராலமானோர் உயிரிழந்தனர்.[2]
பிறப்புகள்
இறப்புகள்
- ஏப்ரல் 6 - ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமனிய எழுத்தாளர், ஓவியர் (பி. 1471)
- ரவிதாசர், இந்திய குரு
மேற்கோள்கள்
- ↑ "Renaissance: The Reconstructed Libraries of European Scholars: 1450-1700". Archived from the original on 2008-07-20. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.
- ↑ உள்ளூர் கசெட்டியர்களில் பதியப்பட்டது.